Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் காவல் நிலைய வேட்டமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்த பிரியா, 26 த/பெ.இளங்கோவன், (SC.PR) என்பவர் ஐந்து மாத சிசு இறந்த நிலையில் தனது வீட்டில் பிறந்ததாகக் கூறி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு முதல் சிகிச்சையில் உள்ளார்.
இவரை விசாரணை செய்ததில் சரியான மனநிலையில் இல்லை. தான் ஆடு மேய்க்கும் போது அதே வேட்டமங்கலம், தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராமன், 65, த/பெ.லட்சுமணன் என்பவர் தன்னிடம் பழகியதாக கூறுகிறார்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஜெயராமன் என்ற முதியவர் பழகி கர்ப்பமாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பவானி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் பந்தநல்லூர் காவல் நிலைய போலீசார் ஜெயராமனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.